Wednesday, October 6, 2010

காதலில் உதிர்ந்தாய்


எப்போது வேண்டுமானாலும்
அந்த மரம்பட்டு போகலாம்
நீ என்னை விட்டுபோகலாம்
திடீர் மழை வரலாம்
நீயும் திரும்பி வரலாம்
.................................

நட்பை வேரோடு
பிடிங்கி பார்த்தால்
காதல் காய்த்திருக்கும்
நீ மட்டும் தான்
காதல் என்ற வார்த்தையில்
பூத்து
காதலில் உதிர்ந்தாய்
.................................

என் மையிலும்
உதட்டிலும்
மிச்சிமிருக்கிறது
உன்னைப் பற்றிய
கவிதையும் காதலும்
.................................

உன் குடத்தில் தழும்பி
இடுப்பில் தற்கொலை
செய்துக் கொள்ளும்
தண்ணீர்
இடை தொடாமல்
இருக்க என் கைகளால்
தடுப்புசுவர்
வைத்துக்கொள்ளேன்
.................................

சட்டை பொத்தான்
கழட்டுவதும்
பிடறிமுடி இழுப்பதும்
தேகம் மீது படரும்
மூச்சுக்காற்று
இவ்வளவு நெருக்கத்தில்
நீ என்ன பேசினால்
எனக்கென்ன
.................................

ஒற்றைச் சவப்பெட்டியில்
இரட்டைப் பிணங்களாவோம்
நீயும் நானும்
................................