நீ கட்டிய மணல்வீட்டை இடிக்கும் குழந்தையை கிள்ளிவிடலாம் போலிருக்கிறது காதல் இவ்வளவு கொடுமையானதா
குழந்தையை வீடுகட்ட சொல்லி நீ இடித்துவிடேன் உன்னை கிள்ளி விடுகிறேன் காதல் இவ்வளவு இனிமையானதா ..........................................
உன் பிறந்த நாளில் பிறக்க முடியாத சோகத்தில் கிழிபடுகின்றன மற்ற நாட்கள் ..........................................
ஆங்கில வகுப்புகளுக்கு செல்லாதே 247 எழுத்துக்களும் உன் துப்பட்டாவில் தூக்கிட்டுக்கொள்ளும் தமிழ் பாவம் பொல்லாதது ..........................................
காலை நேரத்தில் உன் சுவாசம் தீண்டும் காற்று மாசு இல்லாமல் தீண்டாவே பூங்காவில் உட்கார்ந்து சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்
உன் சுவாசம் நுழைந்து வெளியேறும் காற்று மூங்கில் காட்டில் புல்லாங்குழல் தேடி அலைகிறது ..........................................
காதலர் தினத்தில் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லாமல் ஹலோ பொண்டாட்டி என்று சொன்னாயே அந்த நாளின் முதல் வார்த்தையில் நான் திருமணம் செய்து கொண்டேன் உன்னை ..........................................
நாம் சந்தித்துக் கொண்டபிறகு நண்பனிடத்தில் தோழியிடத்தில் நடத்துனரித்தில் எல்லாமாய் நீயாய் நினைத்து பேசிக்கொண்டிருந்தேன்
ஆமாம் நீ யாரோ பைத்தியக்காரனிடம் பேசிக் கொண்டிருந்தாய் போல ..........................................
உன் படுக்கை அறையில் செத்துப்போகவே வருகிறது கொசுக்கள் தவிர உன்னை கடிக்க அல்ல ..................................
யாருமில்லாத லிப்டில் இனி ஏற மாட்டேன் நீயில்லாத போது நோட்டுபுத்தகத்தை கட்டிபிடிக்க வேண்டியுள்ளது ..................................
யரோ இறந்ததை பார்த்து கண்ணீர் வடிக்கிறாய் உன் வீட்டு வாசலில் செத்துக் கிடக்கலாம் போலிருக்கிறது ..................................
இரண்டு பேருக்கு ஒரு காதலி நீ மட்டும் தான் எனக்கும் என் கேமிராவுக்கும் ..................................
அப்பா அம்மா விளையாட்டுக்கு பிறகு நேரடியாக இறுதி சுற்றுக்கு வந்து விட்டோம் கணவன் மனைவி விளையாட்டு என்ன ஒரு வளர்ச்சி அடடா... ..................................
என் ஆலய வெளியெங்கும் குடியிருக்கும் மீனாட்சியும் நீதான் என் மனஅலமாரியில் பகுத்தறிவு புத்தகமும் நீதான் ..................................
ஒரு முறையேனும் நானாய் இருந்து பார் காதலின் பாரம் தாங்கமல் இறந்தே போவாய் மயிலிறகு ஏற்றி வந்த மாட்டுவண்டி அச்சு முறிந்த கதை தெரியும் தானே... ..................................
கோபம்... வெறுப்பு... துன்பம்... இயலாமை... துரோகம்... இதுபோலத்தான் காதலும் ஒரு உணர்ச்சி என்று சொல்பவன்
நீஒரு அழகிய முரண்பாடு என்னிடம் பேசும்போது மட்டும் கண்களை விடுத்து இதயத்தால் பார்க்கிறாய் பேசாத போதோ இதயம் மூடி கண்களில் மௌனிக்கிறாய் .............................................
உன்னோடு பேருந்தில் பயணிக்கும் போதெல்லாம் மணமக்கள் இருக்கையில் நாம் இருப்பது போலவும் பயணிகள் எல்லாம் வாழ்த்த வந்தவர்கள் போலவும் தான் இருக்கிறது .............................................
ஒவ்வொரு பெண்ணிடம் இருந்தும் ஒரு கவிதையை களவாட முடியும்தான் என்றாலும் உன்னிடம் மட்டும்தான் காதலை களவாட முடிகிறது .............................................
நீநடக்கும் தார்ச்சாலையை குளிப்பாட்டி மொழுகி விட வருகிறது மழை .............................................
நீபேசுவதை விடவும் மௌனம்தான் பிடிக்கிறது மௌனம் கலைந்து வரும் அடுத்த வார்த்தை எனக்கானதாய் இருக்கும் என்பதால்
உன் மௌனத்தை விடவும் நீ பேசுவது பிடிக்கிறது பேச்சைத் தொட்டுத் தொடரும் மௌனத்தில் நானிருப்பேன் என்பதால் .............................................
உனக்கெழுதிய காதல் கடிதங்களின் எழுத்துகளை உள்ளங்கையால் தடவிப் பார்க்கிறாய் என் சட்டை பையிலிருந்த எழுதுகோல் இதயம் குத்தி குதூகலிக்கிறது .............................................
அவன் செய்த சிறந்த கவிதை யாதெனில் முத்தம் தருவதாக நெருங்கி விழி மலர்த்த செய்து முகம் மீது படர்ந்திருந்த கற்றை முடியை ஆட்காட்டி விரலால் ஒதுக்கி விட்டு ஒதுங்கி நின்றானே அதுதான் .............................................
பிறந்த நாளுக்கு எல்லோரும் வாழ்த்துச் சொல்கிறார்கள் நீ காதல் சொல்கிறாய் அடிக்குறும்புக்காரி நான் எதைக் கொண்டாட? ..........................................
நந்தியின் காதில் ஏதோ கிசுகிசுத்துவிட்டு போய்விட்டாய்
பாவம் நந்தி எல்லோரிடமும் புலம்பிக்கொண்டிருக்கிறது
அடிப்பாவி என்னிடமே சொல்லி இருக்கலாம் உன் காதலை ............................................
குழந்தைக்கு பெயர் வைக்க எழுதித்தந்த அத்தனை பெயர்களையும் நிராகரித்துவிட்டு
சிரித்துக்கொண்டே ஒரு ஆணின் பெயரை பெயரிட்டாய்
முதல் காதலில் தோற்றவள் என தெரிந்தது
இப்படித்தான் என்பெயரும் இடப்பட்டு இருக்குமோ ஏதோ ஒரு குழந்தைக்கு .................................................
குழந்தையின் கையசைப்பை வேறு வேறு திசைகளில் இருந்து ரசிக்கிறோம்
குழந்தையில் உனக்கு வைத்தது போக மீதிப் பெயர்களை எல்லாம் உன் தெருக் குழந்தைகளுக்கு சூட்டிவிட்டார்கள் போல இவ்வளவு அழகாக வளர்ந்து நிற்கிறார்களே ................................
காதலின் தயக்கங்களை உன் செவ்வாயில் அடக்கி வைக்காதே ஏதாவது ஒரு திங்களில் வெளிப்பட்டுவிடும் பருக்களாக ................................
அழகழகாய் பூத்துக் கிடக்கின்றன காதல் வார்த்தைகள் உதடுகளில்
கவிதை வாடகைக்கு குடியிருக்கும் பகுதி நீ இருக்கும் மகளிர் விடுதி .................................
உன்னைப் பற்றி கவிதைச் சொல்ல சொன்னாய் இரண்டு கவிதைகள் சொன்னேன் இவ்வளவுதானா என செல்லமாய் சிணுங்கினாய் இன்னொரு கவிதையாய் இருந்தது .....................................................
பேருந்து நிழற்குடையில் ஒழுகும் மழைத்துளியை கையில் வாங்கி விளையாடிக் கொண்டிருக்கிறாயா? இல்லை மழையை தாலாட்டிக் கொண்டிருக்கிறாயா? ........................................
நந்தவனத்தில் இருந்து மல்லிகைச் செடி நகர்ந்து வருவது போலிருக்கிறது உன் வெளியேற்றம்.
காதல் கவிதை எழுதுவாயா என கேட்கிறாய்? உன் பார்வையால்
இது வரை இல்லை என்றேன் என் மௌனத்தால்!
இனிமேல் எழுதுவாய் என்றது வீதி முனையில் விசுக்கென்று திரும்பிய உன் பார்வை
ஓ! இப்படியும் காதல் சொல்லலாமா? ...................................
உன் தலைமுறை தாண்டிய தயக்கங்களை உதறிவிட்டுவா! நம்மை பிரிக்கும் அப்பன்கள் வரலாற்றில் இடம் பிடிப்போம்! ...............................
தயக்கங்களை பதுக்கி வைக்கும் உதட்டு பள்ளத்தாக்கத்தில் பரவி கிடக்கிறது
எனக்கான காதல் வார்த்தைகள்
மாப்பிள்ளையை கதவிடுக்கில் பார்க்கும் நாணப்பெண் போல ...................................
முடிவுறா தெருக்களில் கைகோர்த்து நடக்கும் இணைகள்... பேருந்து ஜன்னலோர இருக்கையில் தீராக் கதைகள் பேசுகிறவர்கள்... காதலனுக்காக மூத்திரச் சந்தில் காத்திருக்கும் காதலி... இரவுநேர குறுந்தகவல் குறும்புகள்...
சொர்க்கம் நரகம் எல்லாம் தாத்தா, பாட்டி கதையில்... என்னை பொறுத்தவரையில் உன் அருகாமை சொர்க்கம் விலகி நின்றால் நரகம் .......................................
நீ பயணிக்கும் பேருந்தை பேருந்து நிலையத்தில் பார்க்கும் பொழுதெல்லாம் பேருந்துகளின் ராணியை போல் தோற்றமளிக்கிறது .......................................
வேர்க்கடலை வாங்கிய காகிதத்தை கசக்கும் முன் கண்டேன் ஒரு கவிதையை என் பெயர் கொண்டவன் எழுதியது பாராட்டுடன் முத்தம் பெற்ற என் முதல் கவிதை ஞாபகத்திற்கு வந்தது அவள் முகமோடு .......................................
காகிதத்தை மேலே எறிந்தேன் நட்சத்திரமானது கீழே விழுந்தது பூக்களானது கையில் பிடித்தேன் கவிதையானது உனக்குத் கொடுத்தேன் கடிதமானது நீ படித்தாய் காதலானது ...........................
உள்ளம் கிளறினாள் உயிர் பிழிந்தாள் உவமை செய்தாள் உலுக்கி எடுத்தாள் உச்சி குளிர்வித்தாள் உதடு சுழித்தாள் ஊழல் முத்தம் வைத்தாள் உ..உ..உ..உ..ஊ ...........................
பூ வைக்க தெரியாது புடவை கட்டத்தெரியாது முத்தம் தர முடியாது தெரிந்த சொல்லியிருக்கிறேன் சின்ன சின்ன பொய்களை அவனிடம் ...........................
என் எல்லா காதல் கவிதைகளுக்கும் பொருந்தி போகிற தலைப்பு உன் பெயர் உன் காதலுக்கு மட்டும் பொருந்தி போகிற பெயர் நான் காதலும், காதலுமாய் நடப்போம் கவிதைக் கோர்த்து ...........................
அடைமழைக்குப் பிந்திய சிறு தூரலாய் நம் ஊடலுக்கு பிந்திய உன் சிணுங்கல்கள்
விட்டுத் தொடரும் அடைமழையாய் சிணுங்களைத் தொட்டு தொடரும் நம் முத்தங்கள் ...........................
காலையில் நீ போடும் கோலங்களின் புள்ளிகள் தான் இரவில் நட்சத்திரங்களாய் பிரதிபலிக்கின்றன ...........................
உன் கன்னம்பட்டு வழியும் முதல் மழைத்துளியை உள்ளங்கை ஏந்த பிடிக்கும்
மழைநின்ற மரத்தடியில் இழை நீரை உலுக்கும் உன் இம்சை பிடிக்கும்
மழைக்கு ஒதுங்கிய நேரத்தில் உன் இதழ் பட்டு தெறிக்கும் மழைத்துளி பிடிக்கும்
பிடிக்கும்... பிடிக்கும்... மழை பிடிக்கும் ...........................
மழையில் நனை குடை மற ஈரம் சேர் துப்பட்டாவில் தலை துவட்டு சேர்ந்து நனை காதல் செய் மழைக்காதல் செய் ...........................
கைக்குட்டை உதறலில் பறக்கும் திருநீறு.... கால் கொலுசின் ஒற்றை சலங்கை.... இரவு நேர கொஞ்சல் குறுந்தகவல்கள்... உன் கற்றை முடியில் ஒரு ஒற்றை முடி... இவைகளை போலத்தான் சேமித்து வைத்திருக்கிறேன் உன்னை பற்றிய எழுதிய கவிதைகளில் நீக்கிய வார்த்தைகளையும் ...........................