Monday, August 30, 2010

* காதல் ஆராரோ

உனக்கெழுதும்
கடிதத்தில்
புள்ளி வைக்கும்போது கூட
முத்தம் வைப்பதாகவே
உணர்கிறேன்
.......................................

நம்
முத்தத்திற்கும்
சத்தத்திற்குமான
இடைவெளியில்
விழுந்து உடைகிறது
வெட்கப்பேய்
.......................................

தேவையில்லாத
பொருட்களையும்
வாங்கி வந்து குவிக்கிறேன்
உன் பெயர் பொறித்த
கடையில் இருந்து
.......................................

பட்டுப்போன மரத்தில்
பறித்து எடுத்து இருப்பார்களோ
காதலில் தோற்றவர்களின்
காகிதங்களை
.......................................

அஞ்சல் செய்யப்படாத
காதல் கடிதத்தினுள்
புகுந்த எறும்புக்கும்
தெரிந்திருக்குமோ
என்
காதலின் தயக்கங்கள்
.......................................

உன்னிடம்
என் காதல் இல்லை
என்று சொன்னபோது
வெடித்த கண்ணீர் பூக்களை
ஒரு குழந்தையைப் போல்
பெருக்கிக் கொண்டிருக்கிறது
என் காதல்
.......................................

எல்லாம்
களைந்த பிறகும்
கலையாத
உன் வெட்கத்திற்கு
என் முதல் முத்தம்
.......................................

குழந்தையின் சிரிப்பில்
உன்னையும்
அழுகையில் என்னையும்
பார்க்கிறேன்
காதல் கைக்கொட்டி சிரிக்கிறது
.......................................

இசைப்பள்ளிக்கு
விடுமுறை
என்னவள்
கொலுசு அணியவில்லை
.......................................

உன் இமைச்
சிமிட்டலின்
அழகையெல்லாம்
என்னிமைகள்
கண்ணீரால் வர்ணித்துக்
கொண்டிருக்கிறேன்
.......................................

நீ உன் கண்களால்
மட்டும்தான் பார்க்கிறாய்
நான் என் கண்ணீராலும்
உன்னைதான் பார்க்கிறேன்
.....................................
நாம் ஒன்றாய் சிரித்த சிரிப்புகள்
என் கண்களிலிருந்து
இரட்டைத்துளிகளாய்
விரிகிறது
.......................................

உன்னை விட்டு
விலகி நின்று பார்த்தால்
என் வானமெல்லாம்
கண்ணீராய் தெரிகிறது
.......................................

1 comment:

அருண் said...

//இசைப்பள்ளிக்கு
விடுமுறை
என்னவள்
கொலுசு அணியவில்லை//
இது படித்தவுடன் மனதில் பதிகிறது.நல்லாயிருக்கு