Tuesday, September 14, 2010

% காதலின் பாரம் %

ன்
படுக்கை அறையில்
செத்துப்போகவே
வருகிறது கொசுக்கள்
தவிர உன்னை கடிக்க அல்ல
..................................

யாருமில்லாத
லிப்டில் இனி
ஏற மாட்டேன்
நீயில்லாத போது
நோட்டுபுத்தகத்தை
கட்டிபிடிக்க வேண்டியுள்ளது
..................................

ரோ இறந்ததை
பார்த்து கண்ணீர் வடிக்கிறாய்
உன் வீட்டு வாசலில்
செத்துக் கிடக்கலாம் போலிருக்கிறது
..................................

ரண்டு பேருக்கு
ஒரு காதலி
நீ மட்டும் தான்
எனக்கும்
என் கேமிராவுக்கும்
..................................

ப்பா அம்மா விளையாட்டுக்கு
பிறகு நேரடியாக
இறுதி சுற்றுக்கு வந்து விட்டோம்
கணவன் மனைவி விளையாட்டு
என்ன ஒரு வளர்ச்சி
அடடா...
..................................


ன் ஆலய வெளியெங்கும்
குடியிருக்கும்
மீனாட்சியும் நீதான்
என் மனஅலமாரியில்
பகுத்தறிவு புத்தகமும் நீதான்
..................................

ரு முறையேனும்
நானாய் இருந்து பார்
காதலின் பாரம் தாங்கமல்
இறந்தே போவாய்
மயிலிறகு ஏற்றி வந்த
மாட்டுவண்டி
அச்சு முறிந்த
கதை தெரியும் தானே...
..................................


கோபம்...
வெறுப்பு...
துன்பம்...
இயலாமை...
துரோகம்...
இதுபோலத்தான்
காதலும் ஒரு உணர்ச்சி
என்று சொல்பவன்

உன்னை பார்க்காதவனாகத்தான்
இருப்பான்
..................................


No comments: