Saturday, September 4, 2010

* *காதல் வாங்கினால், முத்தம் இலவசம்

குழந்தையில்
உனக்கு வைத்தது போக
மீதிப் பெயர்களை எல்லாம்
உன் தெருக் குழந்தைகளுக்கு
சூட்டிவிட்டார்கள் போல
இவ்வளவு அழகாக வளர்ந்து
நிற்கிறார்களே
................................

காதலின் தயக்கங்களை
உன் செவ்வாயில்
அடக்கி வைக்காதே
ஏதாவது ஒரு திங்களில்
வெளிப்பட்டுவிடும்
பருக்களாக
................................

ழகழகாய்
பூத்துக் கிடக்கின்றன
காதல் வார்த்தைகள்
உதடுகளில்

வந்து உதடுகளால்
உலுக்கிவிடு

இதயம் நிரம்பட்டும்
................................

ன்னை காதலித்தப் பிறகு
தலையணை நனைத்ததே இல்லை
விழிகளில் என்றாய்

பிறகு என்ன
தலையணை அணைக்கிறாயா
என்றேன்

நெற்றிச் சுருக்கி
வெட்கமாய் பார்க்கிறாய்
தலையணையாய்
மாறிப்போயிருந்தேன்
................................

ம் வாழ்க்கைப் புத்தகத்தில்
முதல் வரி நீ
இரண்டாம் வரி நான்
மீதியை
காதல் நிரப்புவோம் வா
................................

ருசக்கர வாகன
பயணத்தில்
நடுவில் புத்தகத்தடை
வைக்காதே
என் பூமிப்பந்து
விலகி விடுகிறது
உன்னிலிருந்து
................................

No comments: