Wednesday, September 1, 2010

* காதல் சத்தங்கள்

காதல் கவிதை
எழுதுவாயா
என கேட்கிறாய்?
உன் பார்வையால்

இது வரை
இல்லை என்றேன்
என் மௌனத்தால்!

இனிமேல் எழுதுவாய்
என்றது
வீதி முனையில்
விசுக்கென்று திரும்பிய
உன் பார்வை

ஓ! இப்படியும்
காதல் சொல்லலாமா?
...................................

உன்
தலைமுறை தாண்டிய
தயக்கங்களை
உதறிவிட்டுவா!
நம்மை பிரிக்கும்
அப்பன்கள்
வரலாற்றில்
இடம் பிடிப்போம்!
...............................

தயக்கங்களை
பதுக்கி வைக்கும்
உதட்டு பள்ளத்தாக்கத்தில்
பரவி கிடக்கிறது

எனக்கான
காதல் வார்த்தைகள்

மாப்பிள்ளையை
கதவிடுக்கில் பார்க்கும்
நாணப்பெண் போல
...................................

முடிவுறா தெருக்களில்
கைகோர்த்து நடக்கும்
இணைகள்...
பேருந்து ஜன்னலோர
இருக்கையில்
தீராக் கதைகள் பேசுகிறவர்கள்...
காதலனுக்காக
மூத்திரச் சந்தில்
காத்திருக்கும் காதலி...
இரவுநேர
குறுந்தகவல் குறும்புகள்...

தலையணை அணைத்தலும், நனைத்தலும்

நன்றாகத்தான் இருக்கிறது
காதல்....

கேட்கும் போதும்
பார்க்கும் போதும்..........

3 comments:

அருண் said...

முதலாவதும் மூன்றாவது ரொம்ப பிடிச்சிருக்கு.தொடருங்கள்.

அருண் said...

Word verification ஐ நீக்கினால் சௌகரியமாயிருக்கும்.

Azhagan said...

Nanri thoazar ...nanri